ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.12.19 கோடியும், கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.3.95 கோடியும் அபராதம் விதித்துள்ளது இந்தியன் ரிசர்வ் வங்கி.
ஐசிஐசிஐ வங்கி அதன் இரு இயக்குநர்களின் நிறுவனங்களுக்குக் கடன் வழங்க அனுமதித்தும், நிதி அல்லாத பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதும், மேலும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் மோசடிகளை ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கத் தவறியது போன்றவற்றில் ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறிச் செயல்பட்டதற்காக ரூ.12.19 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு,”வங்கிகளால் நிதிச் சேவைகளை அவுட்சோர்சிங் செய்வதில் அபாயங்கள் மற்றும் நடத்தை விதிமுறைகளை நிர்வகித்தல், வங்கிகளால் ஈடுபடுத்தப்படும் மீட்பு முகவர்கள், வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை, கடன்கள் மற்றும் முன்பணம் செலுத்துதலில் சட்டரீதியான மற்றும் பிற கட்டுப்பாடுகள்” போன்றவற்றில் ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறிச் செயல்பட்டதற்காகவும் ரூ.3.95 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.